காலக் கொடுமை… ஏடிஎம்மில் பணம் எடுக்க வேலைக்கு ஆள் தேவையாம்… திருச்சியில் விளம்பரப் பலகை
ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துக் கொடுக்க வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் திருச்சியில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என்ற விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ஆயிரம் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தப் பிறகு இந்தியாவில் நடந்து வரும் துயரங்கள் சொல்லி மாளாதவை. பண மதிப்பு நீக்கம் கடந்த மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஒரு மாதம் கடந்து போய் கொண்டிருக்கிறது. இன்னமும், வங்கியின் வாசலிலும், ஏடிஎம் மையத்தின் வாசலிலும் மக்கள் கூட்டம் அலை மோதியே படியே உள்ளது.

ஏடிஎம்மில் நீண்ட நேரம் வரிசையில் நின்று பணம் கிடைத்து விடும் என்றால் கூட பரவாயில்லை. பணம் எடுக்க அருகில் சென்ற நிலையில், ஏடிஎம் இயந்திரம் பணம் இல்லை என்று கைவிரித்துவிட பணத்தை எடுக்க முடியாத பொதுமக்கள், அடுத்த ஏடிஎம் மையம் நோக்கி ஓடுகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்களின் சொந்தப் பணத்தை எடுக்கவே பல மணி நேரம் வரிசையில் நிற்கின்றனர். பலர் தெருத் தெருவாக அலைந்து திரிந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் நேரம் விரயம் அதிகம் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்வோரால் குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டு வேலை கெட்டுவிடுகிறது. 2000 ரூபாய் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க ஒரு நாள் வீணாகிவிடுகிறது. இதனால் மக்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடை ஒன்றில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்கு காமிடியாக தோன்றினாலும், பாஜக ஆளும் இந்தியாவில் இதுதான் உண்மை நிலைமை என்கிறார்கள் பொதுமக்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications