போச்சு.. டிமான்டி காலனி பேய் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன...!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்திருந்த டிமாண்டி காலனியில் பயன்பாடற்று இருந்த வீடுகள் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த வீடுகளுக்கு பெரும் பேய் பின்ணனி உண்டு. டிமாண்டி காலனியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கிளம்பிய வதந்தியால் அப்பகுதி ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக பலகாலமாக திகழ்ந்து வருகிறது.
இங்குள்ள வீடுகளில் பேய்கள் குடியிருப்பதாகவும் கூட வதந்திகள் உள்ளன. இதை வைத்து சமீபத்தில் கூட படம் எல்லாம் கூட வந்தது.

வதந்தி பேய்:
இந்நிலையில் டிமாண்டி காலனியில் முன்பு வசித்த மக்கள், டிமாண்டி காலனி சொத்தை கையாள்வதில் சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பிவிடுவதாக கூறி வந்தனர்.

தவிடு பொடியாக்கிய மாநகராட்சி:
இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று காலை டிமாண்டி காலனியில் அமைந்திருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

ஜான்சி ராணி:
இது குறித்து 123 ஆவது வார்டு ஜான்சி ராணி கூறும்போது, "இங்குள்ள கட்டிடங்கள் இப்போதைக்கு இடிக்கப்படுகின்றன. ஆனால், இங்கு வேறு கட்டிடம் கட்ட அனுமதியோ, இல்லை காலனியை மீண்டும் உருவாக்க அனுமதியோ யாரும் கோரவில்லை" என்றார்.

மீண்டும் வருமா டிமான்டி?:
இதற்கிடையில் டிமாண்டி காலனி சொத்தை நிர்வகித்துவரும் சென்னை, மயிலாப்பூர் ஆர்ச்டயசிஸ் நிர்வாகிகளோ, டிமாண்டி காலனியை மீண்டும் உருவாக்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆதரவற்றோரின் நலனுக்காக உருவாக்கப்பட்டது இக்காலனி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications