அச்சத்தில் அலோபதி... சித்தமருத்துவம் பற்றி அவதூறு!

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு என்று சித்த வைத்தியத்தை நோக்கி மக்கள் நகர்வதால் அலோபதி மருத்துவர்கள் அவதூறு பரப்பவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் பரிந்துரை செய்யப்படுவதால் அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவம் குறித்து அவதூறு பரபப்புவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ள டெங்கு காய்ச்சல் குணமாக நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறு பரிந்துரை செய்யப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் டெங்குவிற்கு நிலவேம்புக் கஷாயம் அருந்தும்படி மக்களை அறிவுறுத்தி வருகிறார்.

இதனால் மக்கள் மீண்டும் சித்த மருத்துவத்தை நாடத் தொடங்கியுள்ளனர். பண்டை காலத்தில் நோய்களுக்கு சிகிச்சையாக இலை, தழைகளின் சாறுகளை எடுத்து மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்த பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இருந்து மக்கள் உடனடி நிவாரணம் தரும் ஹலோபதி மருத்துகளை நாடிச் செல்ல ஆரம்பித்தனர்.

 சித்த மருத்துவம் டூ அலோபதி

சித்த மருத்துவம் டூ அலோபதி

சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலத்திற்குப் பிறகே நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும், ஆனால் அது நிரந்தர நிவாரணமாக இருக்கும். மேலும் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படும் கஷாயம், சூரணம் உள்ளிட்டவை உட்கொள்ள கடினமாகக் கருதப்பட்டது. இந்நிலையில் எளிதாக உட்கொள்ள வசதி, நவீன கருவிகள் சிகிச்சை என்று அலோபதி அபிரிமித வளர்ச்சியடைந்தது.

 பழமை சிகிச்சை முறை

பழமை சிகிச்சை முறை

எனினும் டெங்கு காய்ச்சலை எந்த மருந்தும் கட்டுப்படுத்தாத நிலையில் நிலவேம்பு கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என்பதால் அதனை அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் சித்தமருத்துவத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், நிலவேம்புக் கஷாயத்தை எல்லோரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பிரச்சாரம் பரப்பப்படுகிறது. மேலும் நிலவேம்புக் கஷாயத்தை உட்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்றும் ஒரு ஆய்வு வெளியானது.

 ஆய்வில் தகவல்

ஆய்வில் தகவல்

ஆனால் இவையெல்லாம் நம்பகமில்லா தகவல்கள் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. நிலவேம்புக் கஷாயம் டெங்குவை கட்டுப்படுத்தும் என்று கிங்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

 சித்த மருத்துவர்கள் விளக்கம்

சித்த மருத்துவர்கள் விளக்கம்

சித்த மருத்துவத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வதந்தி பரப்பப்படுவதாகவம், இதனை நம்ப வேண்டாம் என்றும் சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெறும் நிலவேம்புச் சாறை மட்டும் அருந்தாமல் அத்துடன் சேர்த்து ஆடாதொடை, சுக்கு உள்ளிட்டவற்றை சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் டெங்கு கட்டுப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பது அவர்களின் கூற்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+