தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வம்சாவளியினர் நெகிழ்ச்சி
தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்த வீட்டை அவரது வம்சாவளியினர் பார்வையிட்டனர்.
நெல்லை : திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள பிஷப் கால்டுவெல் நினைவு இல்லத்தை இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த அவரது வம்சாவளியினர் பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியில் தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் வசித்த வீடு அமைந்து உள்ளது. அவர் இறந்த பிறகு அவரது உடல் இடையன்குடி தூய திருத்துவ ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்டுவெல் வாழ்ந்த அந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக பராமரித்து வருகிறது.

இந்நிலையில், பிஷப் கால்டுவெல் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் டேசா, கேட் ஆகியோர் இடையன்குடிக்கு நேற்று வந்தனர். அவர்களை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பிஷப் கால்டுவெல், அவருடைய மனைவி எலைசா ஆகியோரது நினைவிடங்களை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பிஷப் கால்டுவெல் நினைவு இல்லத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த தங்கள் வம்சாவளியினரின் பழைய புகைப்படங்கள் மற்றும் பொருட்கள், பிஷப் கால்டுவெல் பயன்படுத்திய பொருட்களையும் பார்வையிட்டு நெகிழ்ந்தனர்.
இதுகுறித்து டேசா, கேட் இருவரும் கூறுகையில், எங்கள் வம்சாவளியை சேர்ந்த பிஷப் கால்டுவெல் தமிழ் மொழிக்கு இலக்கிய பணிகள் ஆற்றி உள்ளார் என்பதை படித்துள்ளோம். ஆனால் இங்கு வந்த பிறகுதான் அவரது தமிழ் பணியை நேரில் அறிந்து கொண்டோம்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரது பெயரில் இங்கு பள்ளிக்கூடங்கள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள், அவருடைய மனைவி பெயரில் கல்லூரி, அவர் நிறுவிய மருத்துவமனை ஆகியன இன்றுவரை செயல்பட்டு வருவது எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எங்கள் வம்சாவளியை சேர்ந்த கால்டுவெல்லை இன்றளவும் தமிழ்மக்கள் மனதில் வைத்து இருப்பது எங்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. தமிழக அரசு, கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை பராமரித்து வருவது எங்களது குடும்பத்துக்கு பெருமையாக உள்ளது. அவர்களுக்கு எங்கள் நன்றிகள் என்று தெரிவித்தனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications