எங்கிருந்து செல்கிறது.. எப்போது செல்கிறது.. பொங்கல் சிறப்பு பேருந்துகளின் பட்டியல்!
பொங்கல் சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து செல்லும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து செல்லும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இப்போதே தங்களது சொந்த வீட்டிற்கு சென்று கொண்டு உள்ளனர்.

இதனால் தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதை தடுப்பதற்காக காலையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நிறைவடைந்து இருப்பதால் பேருந்துகள் ஓடத்தொடங்கி உள்ளது.
சென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அண்ணாநகர் மேற்கில் ஆந்திரா நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். சைதாப்பேட்டையில் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.
பூந்தமல்லி நிலையத்தில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி, ஆற்காடு, ஓசூர் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.தாம்பரம் சானிடோரியம் நிலையத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக தஞ்சாவூர் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.
கோயம்பேடு நிலையத்தில் மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். இதனால் சென்னையின் உட்பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
காலதாமதம் காரணமாக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக மக்கள் பயணம் செய்யலாம் எனப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications