8 வழி சாலை வந்தா, இந்த அரசு காணாம போயிடும்.. சேலத்தில் சாமியாடிய பெண் அருள்வாக்கு
சேலம் குள்ளம்பட்டி கிராம மக்கள் அம்மனிடம் கிராம மக்கள் மனு
சேலம்: 8 வழிச்சாலை அமைந்தால் இந்த அரசு காணாமல் போய்விடும் என சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி கிராமத்தில் ஒரு பெண் அருள்வாக்கு சொல்லியுள்ளார்.
சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் நிலம் கையகப்படுத்தும் பணியினை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதனால் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவது 5 மாவட்ட மக்களையும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி மக்கள் முடிவெடுத்தனர். அதனால் தங்கள் கிராமத்திலேயே உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு விவசாயிகள், பெண்கள் அனைவரும் ஒன்றாக கிளம்பினர். எதிர்ப்பினை வெளிப்படுத்த எல்லோரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். அவர்களின் கையில் ஒரு கோரிக்கை மனுவும் இருந்தது.
அதில், சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை பூசாரியிடம் கொடுத்து அம்மன் காலடியில் வைக்க சொன்னார்கள். அதன்பின்னர் அம்மனிடமே அந்த மனுதரப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்கு அனைவரும் பொங்கலிட்டனர்.
அப்போது பக்தை ஒருவருக்கு திடீரென்று சாமி வந்துவிட்டது. அருள்வாக்கு கூறவும் தொடங்கினார், "யார் நிலத்தையும் எடுக்க விட மாட்டேன். எடுத்த நிலத்தை எல்லோருக்கும் திருப்பி தருவேன், இது சத்தியம், ஒருவேளை 8 வழி சாலை இங்கே வந்தா, இந்த அரசு காணாம போயிடும்" என்றார். இதனையடுத்து சிறிது நேர பரபரப்புக்கு பின் அங்கு அமைதி நிலவியது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications