ஆந்திர துப்பாக்கிச் சூடு எதிரொலி: எல்லையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவு
சென்னை: செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆந்திர மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் அம்மாநில டிஐஜி காந்தராவ் தலைமையில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று காலை தேடுதல் வேட்டை நட்த்தினர். அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழக- ஆந்திரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட எல்லைகளில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பிகளுக்கு சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட எஸ்பிகளுக்கு அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications