ஆந்திர துப்பாக்கிச் சூடு எதிரொலி: எல்லையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவு
சென்னை: செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆந்திர மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் அம்மாநில டிஐஜி காந்தராவ் தலைமையில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று காலை தேடுதல் வேட்டை நட்த்தினர். அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழக- ஆந்திரா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட எல்லைகளில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பிகளுக்கு சட்டம் ஒழுங்கை கண்காணிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட எஸ்பிகளுக்கு அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications