தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து 5 மண்டல ஐ.ஜி.களுடன் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆலோசனை
தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து 5 மண்டல ஐ.ஜி.,களுடன் டி.ஜி.பி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாகிச்சூட்டை அடுத்து, அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து காவல்துறை டி.ஜிபி ராஜேந்திரன், 5 மண்டல ஐ.ஜி.,களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 22ம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை டி.ஜி.பி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில், 5 மண்டல ஐ.ஜி.,களுடன் டி.ஜி.பி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications