தமிழகம் முழுவதும் 11 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டி.ஜி.பி., ரஜேந்திரன் உத்தரவு

காவல்துறையில் பணிபுரிந்து வந்த 11 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த காவல்துறை உதவி ஆணையாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த அழகேசன் சென்னை மாநகர உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

 DGP T K Rajendran has transfer to 11 DSP's

அம்பத்தூர் உதவி ஆணையாளராக இருந்த ஏ.பி.செல்வம் தி.நகர் பகுதிக்கும், தி.நகர் உதவி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் அம்பத்தூர் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய குற்றவியல் பிரிவின் உதவி ஆணையாளர் வின்சென்ட் ஜெயராஜ், அசோக் நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டூர்புரம் உதவி ஆணையாளர் ஆல்பிரெட் வில்சன், பூந்தமல்லி பகுதிக்கும், பூந்தமல்லி உதவி ஆணையாளர் முத்தழகு, எழும்பூர் பகுதிக்கும் பணி இட மற்றம் செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் உதவி ஆணையாளர் sc /st விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய குற்றவியல் பிரிவின் இணை ஆணையாளர் ரவிச்சந்திரன், ராஜபாளையம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அசோக் நகர் உதவி ஆய்வாளர் ஹரிகுமார் வனிகவரித்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை புலனாய்வு பிரிவில் பணி புரிந்து வந்த ராஜகாளியப்பன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+