திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. சபாநாயகர் தனபால் மீது ஜெ. கடும் அதிருப்தி.. விரைவில் ராஜினாமா?
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் புதிய சபாநாயகர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக 80 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் கடந்த 17-ந் தேதி அறிவித்தார். ஆனால் இந்த அமளியின் போது சபையில் இல்லாத 2 திமுக எம்.எல்.ஏ.க்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டாராம் தனபால்.
இந்த 2 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மதுரை பிடிஆர்பழனிவேல்ராஜன் தியாகராஜன் இதை நீதிமன்றத்தில் குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். மற்றொரு எம்.எல்.ஏ.வை சஸ்பெண்ட் பட்டியலில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார்.

சட்டசபையில் பொதுவாக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவது, சஸ்பெண்ட் செய்வது என நடவடிக்கை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சபாநாயகர் குறிப்பிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பது வழக்கம். ஆனால் திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் அப்படி நடந்து கொள்ளவில்லையாம்.
இதனால் நிச்சயம் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக கோபமடைய செய்துள்ளதாம். இதேபோல் காவல்துறை மானியக் கோரிக்கை நாளில் மிகப் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுப்பதைப் போல பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டதும் பத்திரிகையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் ஜெயலலிதாவுக்கு கடும் அதிருப்தியாம்.
இதனால் நேற்று சட்டசபையில் 110-வது விதிகளின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர் உடனே ஓய்வறைக்கு சென்றார் ஜெயலலிதா. அவர் சென்ற சிறிது நேரத்திலேயே அமைச்சர்கள், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோருக்கு அழைப்பு வந்தது.
அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆனால் இத்தனை பேரிடமும் தனித்தனியே ஆலோசனை நடத்தி முடிக்கும் வரை சபாநாயகர் தனபால் 40 நிமிடமாக ஜெயலலிதாவின் அறைக்கு வெளியே காத்தே கிடந்தாராம். ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு தனபால் மிகவும் வருத்தத்துடன் வெளியே வந்தார்.
பின்னர் பத்திரிகைகளுக்கு அனுப்பிய முதல்வரின் 110-வது விதிகளின் கீழான அறிவிப்பு படத்தில் தனபால் படம் மிஸ்ஸிங். இதனால் நிச்சயம் சபாநாயகர் தனபால் மாற்றப்படுவது உறுதி என்கின்றன கோட்டை வட்டாரங்கள். விரைவில் சபாநாயகர் தனபால் தமது பதவியை ராஜினாமா செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.


ஆக.12, ஆக.18-ந் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதிகளின் கீழ் அறிவிப்பு வெளியிட்டது குறித்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படங்களில் சபாநாயகர் தனபால் படம் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் நேற்று பத்திரிகைகளுக்கு அரசு அனுப்பிய படத்தில் சபாநாயகர் தனபால் படம் இடமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications