தர்மபுரியில் குழந்தைகள் பலியான விவகாரத்தில் அரசு பாராமுகம்: ஸ்டாலின் தாக்கு
சென்னை: தருமபுரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பலியானது பற்றி தமிழக அரசு பாராமுகமாக இருப்பதை கண்டிப்பதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் இறந்தது பற்றி தமிழக அரசு பாராமுகமாக உள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் பற்றி சுகாதாரத் துறை அமைச்சர் அளித்திருக்கும் விளக்கம் ஏற்பதாக இல்லை. அவரின் விளக்கம் பொறுப்பற்றதாக உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான சுகாதார வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்றார்.
தருமபுரி சம்பவதத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications