நீரிழிவு நோயாளிகள் அரசுப் பணிக்கு தகுதியானவர்களே.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : நீரிழிவு நோயாளிகள் அரசுப் பணிக்குத் தகுதியானவர்கள் தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

2007ஆம் ஆண்டு தென்னக ரயில்வேயின் 3,698 குரூப் டி பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர் புஷ்பம் என்பவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால், அவர் உட்பட 58 பேர் அரசுப் பணிக்கு தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டனர்.

chennai high court

இதனை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் புஷ்பம் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவருக்கு அரசுப் பணி வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தென்னக ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்ரமணியன், மதிவாணன் ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரர் புஷ்பத்தை 8 வார காலத்துக்குள் அவரது தகுதிகுக்கு ஏற்ற பணியில் நியமிக்க தென்னக ரயில்வேக்கு உத்தரவிட்டது.

மேலும், நீரிழிவு நோயாளிகள், அரசுப் பணிக்கு தகுதியுடையவர்களே என்றும், அரசுப் பணிக்கு நீரிழிவு நோயாளிகள் தகுதியில்லாதவர்கள் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உலகிலேயே நீரிழிவு நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. உலக நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை விடுத்துள்ள ஆய்வறிக்கையில், 40.9 கோடி இந்தியர்கள் நீரிழிவு நோயாளிகள் என்று கூறுகிறது. அப்படியானால், அவ்வளவு பேரும் வேலை இல்லாமல் தான் இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+