ஜெ. வீட்டுக்குள் நாங்கள் செல்லவில்லை... வருமான வரித் துறை அதிகாரிகள்
ஜெயலலிதாவின் அறைக்குள் நாங்கள் செல்லவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த அறைக்குள் நாங்கள் செல்லவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 9-ஆம் தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித் துறையினர் ஐடி ரெய்டு நடத்தினர். இதையடுத்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும், நகைகள், ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சோதனை நடந்தவர்கள் ஒவ்வொருவரையும் சென்னை அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு போயஸ் கார்டனில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சுமார் நள்ளிரவு 1.30 மணி வரை நடைபெற்ற இந்த சோதனை குறித்து வருமான வரித் துறையினர் கூறுகையில், ஜெயலலிதாவின் அறைக்கு நாங்கள் செல்லவில்லை. ஜெயலலிதாவின் செயலாளர் பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. முறையான அனுமதியைப் பெற்ற பிறகே சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பூங்குன்றனின் அடையாறு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்கு பின்னர் விவேக் ஜெயராமன் கூறுகையில், ஜெயலலிதா தங்கியிருந்த அறையை சோதனை நடத்த அதிகாரிகள் கேட்டனர் , ஆனால் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடித பண்டல்களையும், பென் டிரைவ், லேட்டாப் ஆகியவற்றையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications