கருணாஸுக்கு ஒரு நீதி.. எச். ராஜாவுக்கு ஒரு நீதியா.. என்ன அரசாங்கம் இது.. தினகரன் பாய்ச்சல்
Recommended Video

திருப்பூர்: கருணாஸுக்கு ஒரு நீதி, எச். ராஜாவுக்கு ஒரு நீதியா. என்ன மாதிரியான அரசு இது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கருணாஸ் கைது விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் பேசுகையில், எச். ராஜா ஒன்று பேசினார். அதை ஊரே பார்த்தது. அதேபோல கருணாஸ் ஒன்றைப் பேசினார். எச். ராஜா தான் பேசியதை மறுத்தார். அது தான் இல்லை, தனது குரலே இல்லை என்றார். ஆனால் கருணாஸ் தான் பேசியதுதான் என்பதை ஒப்புக் கொண்டார். அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

ஆனால் இன்று கருணாஸ் மீது வழக்குகளைப் போட்டு கைது செய்துள்ளனர். அதேசமயம், எச். ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கருணாஸ்க்கு ஒரு நீதி, எச்.ராஜாவிற்கு ஒரு நீதி என்பது அரசின் இரட்டை நிலைப்பாட்டை நிரூபிக்கிறது.
எச்.ராஜா பேசியதில் காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்ற கருத்தில் நான் ஒத்துப் போகிறேன். கருனாஸ் பேசியது வருத்தமளிக்கிறது. சட்டசபையில் என்னை ஒருமையில் பேசியதற்கு கருனாஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று அதையெல்லாம் மனதில் வைத்து கருனாஸ் கைது செய்யபட்டிருக்கிறார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பசுந்தோல் போத்திய புலி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டது. அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது கோமாளித்தனமாக உள்ளது. ஜெயக்குமார் சொல்வது குறித்து பேசுவது நமது நேரத்தை வீணாக்கவேண்டாம்.
மாநில அரசு வரிகளை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும். தற்போதுள்ள துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவே ஆர்.கே நகரில் மக்கள் எனக்கு வாக்களித்தனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 37 இடம் வெற்றி பெறுவோம் என தான் கூறியது நடக்கும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை மீறி தேசியகட்சிகள் வெற்றி பெற முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications