ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டி
டிசம்பர் 21-ந் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தொப்பியில் நிற்போம்..ஜெயிப்போம்.. இரட்டை இலையை மீட்போம் - தங்க தமிழ் செல்வன்- வீடியோ
திருப்பூர்: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலாவின் அக்கா மகன் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.
சசிகலா கோஷ்டியின் 5 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கோஷ்டியின் அவைத் தலைவர் அன்பழகன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிடுவார்.
சென்னையில் சசிகலா அணியின் ஆட்சி மன்றக் குழு நாளை நடைபெற உள்ளது. இந்த ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் தினகரன் முறைப்படி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.












Click it and Unblock the Notifications