குடகு மாவட்ட ரிசார்ட்டிலிருந்து கிளம்ப ரெடியாகும் தினகரன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்கள்!
Recommended Video
மடிகேரி: குடகு மாவட்ட ரிசார்ட்டிலிருந்து, இன்னும் ஓரிரு நாட்களில் புறப்பட தயாராகிவிட்டனர் தினகரன் ஆதரவு, முன்னாள், எம்.எல்.ஏக்கள்.
எடப்பாடி அரசுக்கு எதிராக செயல்பட்டு புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், பின்னர் கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்திலுள்ள சொகுசு ரிசார்ட்டிற்கு இடம்மாறினர். அதில் ஜக்கையன் என்ற எம்எல்ஏ மட்டும் தப்பித்து எடப்பாடி பக்கம் வந்துவிட்டார்.
இதனிடையே தினகரன் ஆதரவு முன்னாள், எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன், நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், இன்று வந்துள்ள உத்தரவு, எங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே ரிசார்ட்டிலிருந்து இன்னும் இரு நாட்களில் புறப்பட உள்ளோம்.
நீதி மன்ற தீர்ப்பு வந்த பின், யார் நல்லவர்கள் என தெரியும். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம். இந்த வழக்கை சந்திக்கும் திடம் எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் அடுத்ததாக எங்கே செல்ல உள்ளனர் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. சொந்த ஊர்களுக்கு திரும்ப வாய்ப்பு குறைவு என்று கூறப்படுவதால்