வெற்றிவேல் இப்படி செய்வார் என்று தினகரனுக்கும், சசிகலாவுக்கும் கூட தெரியாது: ஜெயானந்த் அதிரடி பேட்டி
Recommended Video
சென்னை: வெற்றிவேல் பேட்டியளித்தது தினகரனுக்கும், சசிகலாவுக்கும் தெரியாது என்று திவாகரன் மகன் ஜெயானந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுகுறித்து கூறுகையில், சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அறிவிக்காமல், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டுவிட்டார்.
வெற்றிவேல் நோக்கம் நல்ல நோக்கம் என்பதால் அதை சசிகலா புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்.
வேறு வழியில்லை
ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டது. வெற்றிவேல் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால்தான் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.
தினகரன் பேசுவார்
இதுகுறித்து தினகரன் இப்போது பேட்டியளித்தால் அதை காரணமாக வைத்தே தேர்தலை நிறுத்த திட்டமிடுவார்கள் என்பதால், வீடியோ பற்றி தினகரன் இப்போது கருத்து கூறவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தினகரன் கருத்து கூறுவார் என்றார்.
பலவீனமாக உள்ளதா
பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளருக்கு தெரியாமல் ஒருவர் வீடியோ வெளியிடுவது உங்கள் தரப்பில் மற்றொரு அதிகார மையம் உருவாகுவதை போலவும், உங்கள் தரப்பு பலவீனமாக இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்குகிறதே என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ஜெயானந்த், "இதுபோன்ற முக்கிய வீடியோவை ஒரே காப்பிதான் வைத்திருக்க வேண்டும் என்று இல்லை.
பல காப்பிங்க
பல காப்பி வைத்திருந்தால்தான் அது அழிந்து போகாமல் காப்பாற்ற முடியும் என வைத்திருப்பார்கள். அதில் தப்பில்லை. அதில் ஒரு காப்பியைதான் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். ஜெ, வீடியோ வெளியானதால் அதிமுக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இவ்வாறு ஜெயானந்த் தெரிவித்தார்.