நீட்: தமிழகத்துக்கு விலக்கு தர அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரனும்... தினகரனின் 'அடடே' டிமாண்ட்
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர கோரி திருச்சியில் நீட் தேர்வு பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் உழவர் சந்தையில் கடந்த 9-ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான பொதுக் கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அனுமதி கோரினார். ஆனால் அன்றைய தினம் வேறு அமைப்பினர் அந்த இடத்தில் கூட்டம் நடத்துவதால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று திருச்சி உழவர் சந்தையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

அனிதா உயிரை பறித்த...
இந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில் தவறான வாக்குறுதியால் அனிதாவின் உயிரை பறித்தது தமிழக அரசுதான். மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில்தான் நீட் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடைசி வரை
ஜெ. கடைசி மூச்சுவரை நீட் வராமல் பார்த்து கொண்டார். அனிதாவின் உயிர் தியாகம் மிகவும் வேதனையானதாக இருக்கிறது. தமிழகத்தில் நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி அல்ல.

ஓபிஎஸ்தான் நீக்கப்பட்டிருக்க வேண்டும்
அத்துடன் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக சட்சபையில் வாக்களித்தவர்கள் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள். முறைப்படி பார்த்தால் அந்த 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதும் தினகரன் தரப்பு வாதம்.

அதிரடி நீக்கம்
மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக இருக்கிறது என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாதிட்டு வந்த நிலையில்தான் இன்று சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்திருக்கிறார். தற்போதைய நிலையில் சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கை நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications