மீண்டும் முதல்வராக முடியாதேன்ற விரக்தியில் பேசுகிறார் ஓபிஎஸ்- தினகரன் கிண்டல்
தஞ்சை: மீண்டும் தன்னால் முதல்வராக முடியாது என்ற விரக்தியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசி வருகிறார் என்று தினகரன் தெரிவித்தார்.
மன்னார்குடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் என்னை முதல்வராக தேர்வு செய்தது ஜெயலலிதாதான். இதுவரை 3 முறை முதல்வராகிவிட்டேன். சசிகலா குடும்பத்தினருக்கு பயந்துதான் என்னை அவர் முதல்வர் ஆக்கினார்.

ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கிடையாது. சசிகலா குடும்பத்தால் இனி அதிமுகவுக்கு வரவே முடியாது. ஜெயலலிதா மரணமடைந்தவுடன் நான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என நினைத்தவர் திவாகரன்.
ஆனால் திவாகரன் இல்லாதபோது என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது சசிகலாதான் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.
இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் தினகரன். அப்போது அவர் கூறுகையில் இனி முதல்வர் பதவி கிடைக்காது என்ற விரக்தியில் பேசுகிறார் ஓபிஎஎஸ் என்றார் தினகரன். நான் முதல்வராக திவாகரன் வலியுறுத்தினார் என்ற ஓபிஎஸ்ஸுக்கு தினகரன் பதில் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications