அமைச்சரவையில் இருந்து 4 பேரை தூக்க வேண்டும்... திகார் தினகரனின் ஆதரவாளர்கள் கூக்குரல்
தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் ஜெயகுமார் உள்பட 4 பேரை தூக்க வேண்டும் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் ஜெயகுமார் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்தது. முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். பின்னர் அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தனது அக்கா மகன் தினகரனை நியமித்து விட்டு சென்றார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு இடியாப்ப சிக்கல்களில் சிக்கினார் தினகரன்.

திகார் சிறையில்...
இதனிடையே ,முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க இரு அணிகளும் ஒன்று இணைவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்கியதாக டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயகுமார் உள்ளிட்டோர் பேச்சு
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும்போதே அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, வீரமணி உள்ளிட்டோர் தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். மேலும் அதிமுக தலைமையகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களும் தூக்கி வீசப்பட்டன. இதனால் தினகரனும், அவரது ஆதரவாளர்களும் கொதித்தனர்.

சிவி சண்முகம் பேச்சு
இதனிடையே தினகரன் கைது குறித்து அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேட்டபோது இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை. அவர் மீதான புகாரை அவரே சந்திப்பார் என்றார். இதுபோல் தினகரனுக்கு எதிராக பல்வேறு அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த தினகரன்
இந்நிலையில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன், தான் தொடர்ந்து அதிமுகவில் பணியாற்றுவேன் என்றும் , தன்னை நீக்க அதிமுக பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் அதிமுகவில் தொடர்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு எடுப்பார் என்றார்.

தினகரனுக்கு பயமா?
இத்தனை நாள்கள் தினகரன் மீது நெருப்பு போல் கக்கிய அமைச்சர்கள் தற்போது தினகரன் வெளியே வந்த நிலையில் பம்மி வருகின்றனர். அதிமுகவில் துணை பொதுச் செயலாளராக தொடர்வேன் என்று தினகரன் கூறியது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, அதுகுறித்து வழிகாட்டுதல் குழு முடிவு செய்யும் என்றார். இது தினகரனிடம் அமைச்சர்களுக்கு ஏற்பட்ட பயத்தையே காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தினகரனுடன் ஆலோசனை
சென்னை வந்த டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் கட்சி தலைமைக்கு எதிராக பேசி வரும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும், கட்சியை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆலோசனையில் தினகரன் அணி ஆதரவு எம்எல்ஏக்களான செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன், தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

4 அமைச்சர்கள் மீது நடவடிக்கை
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள் சசிகலா, தினகரனுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், கட்சியை தினகரன் கைப்பற்ற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது என்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications