ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது
ஆர்கே நகரில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் 5 பேரை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாழ்வா? சாவா என அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதிலும் மும்முரமாக இருக்கின்றன கட்சிகள்.

தினகரன் தரப்பில் ஒரு வாக்காளருக்கு ரூ8,000 தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 தினகரன் ஆதரவாளர்களை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து இன்று தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை தினகரன் சந்திக்கவும் இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications