தினகரனுக்கு கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்... அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல்
தினகரன் சிறைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்து விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
அதிமுக குறித்தும், ஆட்சி குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்தும் யாராவது கிண்டல் செய்தாலோ, விமர்சனம் செய்தாலோ முதலில் பதில் தருவது தான் அமைச்சர் ஜெயக்குமாரின் ஸ்டைல். சமீபகாலமாக ஸ்டாலின், கமல், தமிழிசை என்று அனைவரின் விமர்சனங்களுக்கு சளைக்காமல் பதிலளித்து வந்த ஜெயக்குமார் தற்போது தினகரன் பக்கம் திரும்பி இருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியில் குழப்பம் விளைவிக்க சிலர் முயல்கின்றனர். அது ஒருபோதும் பலிக்க போவதில்லை என்றார். மேலும் அதிமுக என்பது பேரியக்கம். எந்த நரி தந்திரங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை எங்களுக்கு புரட்சி தலைவி கற்று கொடுத்துள்ளார். அவர்களின் ஆசி எங்களை நல்ல முறையில் வழிநடத்தும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது என்றார்.
மேலும் தினகரனால் அதிமுகவின் ஒரு செங்களை கூட தொட இயலாது. அவர் விரைவில் சிறை செல்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் பிரகாசமாக உள்ளது. அவ்வாறு சிறை செல்லும் பட்சத்தில் அவரிடம் இருக்கும் அனைவரும் எங்களுடன் வந்து சேர்வார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications