”புல்” மப்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ரகளை செய்த பெண்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஒரு பெண் போதையில் ரகளை செய்த சம்பவம் அங்கிருந்த பயணிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

திண்டுக்கல் பஸ் நிலையம் நேற்று மாலை 5.30 மணி அளவில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையில் தள்ளாடியபடி வந்தார். அப்போது பஸ்களை தேடி செல்லும் பயணிகளை அந்த பெண் இடிப்பது போல் சென்றார். இதனை பார்த்த இளைஞர்கள் அதனைக் கேட்டதற்கு அவர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.

அதோடு தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்வர்களையும் வாய்க்கு வந்த படி பேசினார். போதையால் தொடர்ந்து நடக்க முடியாமல் தள்ளாடிய அந்த பெண் திடீர் என தரையில் அமர்ந்தார். இதனை பஸ் நிலையத்தில் பார்த்த பெண்கள் முகம் சுளித்தனர். ஒரு சிலர் மகளிர் போலீசாரிடம் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+