வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்து பேசிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை திரைப்பட இயக்குனர்கள் சிலர் சென்று சிறையில் சந்தித்துப் பேசினர்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய தூக்குதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் நீதிமன்றம் வாயிலாக போராடி வரும் நிலையில் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாத தனது தந்தை குயில்தாசனை சந்திக்க பரோல் வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தனர்.
சிறையில் 30 நிமிடம் அவர்கள் பேரறிவாளனுடன் உரையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பேரறிவாளனை சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என்பதற்காக வந்தோம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications