சபாநாயகர் உத்தரவை நீதிமன்றம் ஏற்குமா? சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன தெரியுமா?
Recommended Video

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகுமா, இல்லையா என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
18 எம்.எல்.ஏக்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ், சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆனால் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து 18 பேரும் சென்னை ஹைகோர்ட்டுக்கு போயுள்ளனர்.
எனவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் பார்வை
இதுகுறித்து சட்டவல்லுநர்களுடன் பேசினோம். அப்போது அவர்கள் கூறிய கருத்துக்களை வைத்து பார்த்தால், 18 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட தகுதி இழப்பு நடவடிக்கை சட்டத்தின் முன்பு செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

கட்சி தாவல் தடை சட்டம்
அதிருப்தியை வெளிப்படுத்துவதாலேயே எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். விப் உத்தரவை மீறி செயல்பட்டால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சட்டசபைக்குள்தான் எப்படி செயல்பட வேண்டும் என்று விப் உத்தரவு பிறப்பிக்க முடியும். வெளியே அதிருப்தியை வெளிப்படுத்த கூடாது என கொறடா கூற முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

சபாநாயகர் வாதம்
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறுவது எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை விட்டுத்தருவதற்கு சமமானது, எனவே எனக்கு வேறு வழியில்லை, இந்த நடவடிக்கையைதான் எடுக்க வேண்டி வந்தது என்று சபாநாயகர் தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கலாம். வேறு எந்த பதிலும் வழங்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

காலம் கடத்தலாம்
ஏற்கனவே எடியூரப்பா ஆட்சி காலத்தில் நடைபெற்ற இதுபோன்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என கூறியுள்ளது. அதேபோலத்தான், இந்த வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எம்எல்ஏக்கள் விவகாரத்தில் காலதாமதம் செய்யவே இந்த நடவடிக்கை உதவும் என்பதுதான் ஆளும் கட்சி எதிர்பார்ப்பாக இருக்க கூடும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications