மக்கள் கடலாக மாறிய ஜவுளிக் கடைகள்.. தீபாவளி வியாபாரம் விறுவிறு #diwali
நெல்லையில் உள்ள ஜவுளிக் கடைகளில் தீபாவளி வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதால் மக்கள் கூட்டம் அங்கு அலை மோதுகிறது.
நெல்லை: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் நெல்லையில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதத் தொடங்கியுள்ளது.
ஏழைகள் முதல் அனைவரும் மகிழ்ச்சியாக ஆண்டுக்கு ஓருமுறை கொண்டாடும் தீபாவளி பண்டிகை வருகிற 29ம் தேதி வருகிறது. தீபாவளி அனறு புத்தாடை அணிந்தும், பட்டாசு கொளுத்தியும், பலகாரம் உண்டும் மகிழ்கின்றனர். மேலும் தங்க ஆபரணங்கள் உள்பட புதிய வீட்டு உபயோக பொருட்கள் வாங்கவும் பலர் ஆர்வம் காட்டுவர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நெல்லையில் விற்பனை களை கட்டியுள்ளது. பலருக்கும் தீபாவளி போனஸ் போடப்பட்டுள்ளதால் அனைத்துத் தரப்பு மக்களும் தீபாவளியை கொண்டாட கடைசி கட்ட ஆயத்த ஆடைகளை வாங்குவதற்காக கடை வீதிகளுக்கு வந்து குவிய தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான தையல் கடைகள் தீபாவளி ஆர்டர் பெறுவதை நிறுத்தி விட்டதால் ரெடிமேடு ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரெடிமேடு கடைகளில் போதிய வியாபாரம் இல்லாமல் இருந்ததாம். தற்போது ரெடிமேடு கடைகளிலும் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது.
நெல்லை டவுன் ரத வீதிகள் மற்றும் வண்ணார்பேட்டை பாளை மார்கெட் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் தீபாவளி கடைகள் முளைத்துள்ளன. இங்கு ஜவுளி வாங்க ஏழை மற்றும் நடுந்தர மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப குறைந்த விலையில் சேலைகள், சட்டைகள் நைட்டிகள், சுடிதார் ஆயிட்டங்கள், 12 வளையல்கள் ரூ.10க்கும், 2 ஜோடி கம்மல் ரூ.20க்கும், நெயில் பாலிஷ், மருதாணி போன்றவை ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தத்தில் மக்கள் தீபாவளியை தடபுடலாக வரவேற்க அனைத்து வழிகளிலும் களம் குதித்து விட்டனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications