குடும்பத்தோடு கொண்டாட வேண்டிய தீபாவளியை குடியோடு கொண்டாட சொல்லும் சிட் பண்ட்!
சென்னை: தீபாவளி பண்டிகை என்பதை குடும்பத்தோடு கொண்டாடுவது என்பதை தாண்டி குடியோடு கொண்டாடுவது என்ற நிலைக்கு தமிழன் அப்கிரேட் ஆகிவிட்டான் என்பதற்கு இந்த ரசீது சீட்டு ஒரு உதாரணம்.
தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி சிறு அளவில் சீட்டு நடத்துவது, கிராமம், நகரம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. பொதுவாக தீபாவளி நேரத்தில், சீட்டு நடத்துவோர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, பாத்திரம், பட்டாசு போன்றவற்றை கொடுத்து குஷிப்படுத்துவார்கள். ஆனால் இங்கு ஒரு சீட்டு கம்பெனி செய்துள்ள வேலையை பாருங்கள்.
மாதம் ரூ.150 வீதம் ஓராண்டு செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளி பரிசாக கிடைக்கப்போகும், ஐட்டங்கள் எவை, எவை தெரியுமா.. ஃபுல் பாட்டில் மது, 2 பியர் பாட்டில், குவாட்டர் -2, சோடா, கடிக்க, சைடிஷ், ஊற்றி குடிக்க கண்ணாடி டம்ளர், மிக்சர், செவன் அப் இன்னும் பற்பல.
வாட்ச்அப்பில் நடமாடும் இந்த ரசீது போட்டோ, தமிழர்களின் குறிப்பிட்ட பகுதியினரின், நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.