தமாகாவைத் தொடர்ந்து தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து "எஸ்கேப்"?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமாகா அணி. இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்த உள்ளதாக கூறியிருந்தார். இதனால் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை தமாகா முறித்துக் கொள்வது உறுதியாகி உள்ளது.
இதேபோல் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை தேமுதிகவும் இன்று முறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தேமுதிக நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை வரும் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தங்கள் கட்சி தேர்தல் உடன்பாடுதான் கொண்டிருந்ததாகவும், கூட்டணி அமைக்கவில்லை என்றும் கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கூறியிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications