விஜயகாந்த் அதிரடி: தேமுதிக கட்சி பொறுப்பில் இருந்து அருண் சுப்பிரமணியம் நீக்கம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள உத்தரவில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ, மு. அருண் சுப்பிரமணியம், அவர் வகித்து வந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவிலிருந்து ஏற்கனவே 7 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் சாய்ந்துள்ளனர். இந்நிலையில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதையடுத்து கட்சிப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications