முடியவே முடியாது... ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியே இல்லை... வம்புபிடிக்கும் தேமுதிக
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதே இல்லை என தேமுதிக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தேமுதிக அறிவித்துள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் தேமுதிக துணைப் பொதுச்செயலர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசு சொல்வதைக் கேட்டே செயல்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக போட்டியிடாது.
இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட்டாலும் அதிமுகவால் ஆர்.கே.நகரில் டெபாசிட் வாங்க முடியாது.
இவ்வாறு சுதீஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications