அக்னி குண்டத்தில் இறங்கினாலும் எடப்பாடியாரின் பாவங்கள் போகாது - பிரேமலதா பொளேர்! வீடியோ
முதல்வர் ஈபிஎஸ் நுரை பொங்க ஓடும் நொய்யல் ஆற்றில் குளிக்கத் தயாரா என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர்: புஷ்கரா விழாவுக்காக காவிரியில் நீராடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நுரை பொங்கும் நொய்யல் ஆற்றில் குளிப்பாரா என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா ஆறுதல் கூறினார் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, துணை முதல்வர் ஓபிஎஸ் தன் சொந்த பிரச்சனைகளுக்காக பிரதமரை சந்திக்கிறார்.

தமிழ்நாட்டில் இடைதேர்தலோ உள்ளாட்சி தேர்தலோ நடைபெறப் போவதில்லை. ஆனால், ஆறு மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் நடைபெறும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் பாவங்களைப் போக்க புஷ்கரா விழாவின்போது மயிலாடுதுறை துலாகட்டத்தில் குளத்தில் குளித்தார். ஆனால் அவர் நுரைபொங்கும் நொய்யல் ஆற்றில் வந்து குளிப்பாரா? அவர் அக்னி குண்டத்தில் இறங்கினாலும் அவருடைய பாவங்கள் போகாது'' என மிகக் கடுமையாக முதல்வரை சாடினார்.












Click it and Unblock the Notifications