விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக உண்ணாவிரதம்.. அமைச்சர்களை வார்த்தைகளால் வச்சு செய்த பேச்சாளர்கள்!!
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் தேமுதிக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆகியோர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனத்.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் தேமுதிக சார்பில் நடத்தப்படும் என்று விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி இன்று காலையில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
விஜயகாந்த் ஓய்பு
உண்ணாவிரதப் போராட்டத்தை தேமுதிக மகளிரணித்தலைவி பிரேமலதா தொடங்கிவைத்துப் பேசினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் ஓய்வெடுத்து வருவதாகவும், இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.
குரல் கொடுத்த கேப்டன்
போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரேமலதா, தேசிய நதிகளை இணக்க வேண்டும் என்று கேப்டன் மட்டும் தான் வலியுறுத்தி வருகிறார். இந்த உறுதியில் இருந்து நாங்கள் விலக மாட்டோம். தமிழர்களுக்கு ஒன்று என்றால் முதல் குரல் கொடுப்பவர் கேப்டன்தான். காவிரி அநீதி, சந்தனக் கட்டை கடத்தலில் கைது செய்யப்படுபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கேப்டன்தான் குரல் கொடுக்கிறார் என்றார்.
அறப்போராட்டம்
இப்போதும் முதலில் அறப்போராட்டம் அறிவித்தார். அதற்குப் பின்னர்தான் பிற கட்சிகள் அறிவித்தனர். திமுகவும் நாங்களும் ஆதரவு கொடுப்போம் என்று அறிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினார் பிரேமலதா.
தேமுதிக நிர்வாகிகள் பேச்சு
இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய தேமுதிகவினர், காவிரி பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமில்லாத விசயங்களையே பேசினர். பிரேமலதா அண்ணியார் ராணி மங்கம்மாள் போன்றவர் அந்த அளவிற்கு தில் அவரிடம் இருக்கிறது என்று கூறினார் ஒரு தேமுதிக நிர்வாகி.
திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பேசியதோடு, கேப்டன் விஜயகாந்தும், அண்ணியார் பிரேமலதாவும், திருக்குறள் போல ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்று கூறினார்.
மாஃபாவிற்கும் அர்ச்சனை
அதோடு மட்டுமல்லாது கல்வியமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பற்றியும், அவரது அமைச்சர் பதவி நிலையில்லாதது என்றும் கூறி தனது பேச்சை முடித்தார். ஆக மொத்தத்தில் இது காவிரிக்கான உண்ணாவிரதமா? அதிமுக அமைச்சர்களை திட்டுவதற்காக போடப்பட்ட மேடையா என்று பலரும் பேசிக்கொண்டனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications