ஆர்கே நகரில் வீதிவீதியாகச் சென்று மக்களைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்!
ஆர்கே நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கனேஷுக்காக வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகரில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. திமுக வேட்பாளர் மருது கணேஷுக்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆர்கே நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைதேர்தல் நடக்கவிருக்கிறது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.கா ஸ்டாலின் ஆர்கே நகரில் ஒவ்வொரு வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.மக்கள் அவரை ஆர்வமுடன் வரவேற்றார்கள். பால்பேதமின்றி அனைவரும் அவருடன் கைகுலுக்க விருப்பம் தெரிவித்து முண்டியடித்தனர்.
வழக்கமாக வேட்டி சட்டையுடன் செல்லும் ஸ்டாலின், ஆர்கே நகர் வீதி பிரச்சாரத்துக்கு ஐடி இளைஞர் போல் ஃபார்மல் பேண்ட் ஷர்ட்டில் சென்றிருந்தார்.












Click it and Unblock the Notifications