வீடு தேடிப் போய் ஸ்டாலின் கூப்பிட்டதற்கு இது தேவைதான்... 'கீழ்த்தரமாக' கிண்டலடிக்கும் சுவாமி!
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தம்பி மகன் திருமணத்துக்கு வீடு தேடி போய் அழைப்பிதழ் கொடுத்ததற்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மிகவும் கீழ்த்தரமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க. தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதி. இவரது திருமணம் ஜூன் 8-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்பிதழை அருள்நிதியின் பெரியப்பாவும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். பாரதிய ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டுக்கும் போய் நேரில் அழைப்பு கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் இந்த சந்திப்பு பற்றி பெருமையாகத்தான் தமது ட்விட்டரில் பதிவு போட்டிருந்தார் சுவாமி. இந்த நிலையில் திருநெல்வேலியில் திருமண விழாவில் மணமகளுக்கே தாலி கட்டப் போய் பயங்கர சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் சுப்பிரமணியன் சுவாமி.
When at MK family wedding on June 8 th shall I carry some Mangal sutras or Thaalis and give it to Veeramani?
— Subramanian Swamy (@Swamy39) May 21, 2015 இது தொடர்பான வீடியோ வெளியாக அவர் முகம் கேவலமாக அம்பலப்பட்டு போனது. இதுபற்றியெல்லாம் வாய் திறக்காத சுப்பிரமணியன் சுவாமி கீழ்த்தரமாக ஒரு பதிவை ட்விட்டரில் போட்டிருக்கிறார்...
அதில், கருணாநிதி வீட்டு திருமணம் 8ம் தேதி நடைபெற இருக்கும் போது நான் தாலியை கொண்டு செல்ல வேண்டுமா? அதை அதை வீரமணியிடம் கொடுக்க வேண்டுமா? என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். அண்மையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி அகற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வையும் இந்த திருமண நிகழ்வையும் இணைத்து வைத்து கேடுகெட்டத்தனமாக ஒரு பதிவை போட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
இது தி.மு,க. தலைமை மற்றும் தொண்டர்களை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது.. "எதையோ கூப்பிட்டு எங்கேயோ உட்கார வைத்தால்.. " என்கிற பாணியில் தி.மு.க. தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சுவாமியை வறுத்தெடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications