சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனிதாவுக்கு திமுகவினர் அஞ்சலி
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு சென்னை அண்ணா அறிவாயலத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சிகளும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் ஒன்று திரண்டு அனிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications