அறிவாலயத்தில்.. விறுவிறுப்பான வேட்பாளர் நேர்காணல்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கான நேர்காணல் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
40 தொகுதிகளுக்கும் திமுக விருப்ப மனுக்களை கட்சியினரிடமிருந்து பெற்றுள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பியுள்ளோரிடம் நேர்காணல் ந
நடைபெறுகிறது. இன்று தொடங்கி மார்ச் 3ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோரது முன்னிலையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேர்காணலில் ஈடுபட்டுள்ளது.
நேர்காணலின்போது, தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளற்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இன்ன பிற செயலாளர்கள் உள்ளிட்டோர் வேட்பாளருடன் உடன் இருப்பார்கள்.
காலையில் 2.. மாலையில் 2
இன்று காலை நெல்லை, கன்னியாகுமரி தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும். மாலையில், தென்காசி தனித் தொகுதி மற்றும் தூத்துக்குடி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.
இதேபோல மார்ச் 3ம் தேதி வரை
இதேபோல ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகள் வீதம் நேர்காணல் நடைபெறும்.
40 தொகுதிகளுக்கும் முடிந்த பிறகு
40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அடையாளம் கண்ட பிறகு கூட்டணியை இறுதி செய்யவுள்ளது திமுக. அதன் பின்னர் தனது வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிடத் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு இவர்கள்தான்
தற்போது திமுக கூட்டணியில் முக்கிய கூட்டணிக் கட்சிகளாக விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளின. இதுபோக சிறு சிறு கட்சிகள் நிறைய உள்ளன.
வேற யாராச்சும்
இவர்கள் போக வேறு சில கட்சிகளையும் திமுக எதிர்பார்க்கிறது. குறிப்பாக தேமுதிகவுக்காக இன்னும் கூட திமுக காத்திருக்கவே செய்கிறது. நேர்காணல் முடிவதற்குள்ளாக தேமுதிக ஏதாவது வாய் திறக்குமா என்ற எதிர்பார்ப்பும் திமுக வட்டாரத்தில் நிலவுகிறது.