போராட்டம் எதிரொலி- அரக்கோணம், ஒரத்தநாடு திமுக வேட்பாளர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அரக்கோணம் மற்றும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதலே பல தொகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு, பாளையங்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரக்கோணம்(தனி) தொகுதி வேட்பாளர் பவானிக்கு எதிராக இன்றும் போராட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் தாம் அத்தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர் பவானிக்கு பதிலாக என். ராஜ்குமார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.
அதேபோல் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். ராஜ்குமாருக்கு பதிலாக எம்.ராமச்சந்திரன் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு 6 முறை வேட்பாளர்களை மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications