தேர்தல் அறிக்கையை கூட அதிமுகவால் இதுவரை வெளியிட முடியவில்லை: கருணாநிதி
தஞ்சாவூர்: தேர்தல் அறிக்கையை கூட இதுவரை வெளியிட முடியாத நிலையில் அதிமுக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தஞ்சாவூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூறினார்.
தஞ்சாவூர் திலகர் திடலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது, பாபநாசம் - லோகநாதன், ஒரத்தநாடு - ராமச்சந்திரன், திருவிடைமருதூர் - கோ.வி. செழியன், பட்டுக்கோட்டை - மகேந்திரன், பேராவூரணி - அசோக்குமார், கும்பகோணம் - அன்பழகன், தஞ்சாவூர் - அஞ்சுகம் பூபதி, திருவையாறு - துரை சந்திரகுமார் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
-திமுக அரசியல் கட்சி மட்டும் அல்ல சமுதாய இயக்கம்
-ஜெயலலிதா ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்
-உயர்ந்த இடத்துக்கு சென்றால் உங்களையெல்லாம் மதிக்காத ஜெயலலிதாக்கள் அல்ல திமுக
-பணத்தை செலவழித்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர்
-நாடு அழிந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களை காப்பாற்ற வேண்டும்
-ஆட்சியை பிடித்து கொள்ளையடித்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர்
-திமுகவுக்கு யாராவது ஊறுவிளைக்க நினைத்தால் சும்மா விடமாட்டேன்
-திராவிடர்கள் அடிமையாக வாழ முடியாது
-மக்கள் என் மீது காட்டும் அன்பால் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
-எதிரிகள் வெற்றி பெற்றுவிட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் சமுதாயத்தை காப்பாற்ற முடியாது
-அண்ணா உருவாக்கிய திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது
-இடது சாரி கொள்கைகளை செயல்படுத்தும் தகுதியுள்ள இயக்கம் திமுக
-நிலஉச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து நிலங்களை பறிமுதல் செய்து ஏழைகளுக்கு வழங்கியது திமுக
-மது மது அது நம்மை கெடுப்பது அது
-1974 ல் மூடப்பட்ட மதுக்கடைகளை திறந்து வைத்த பெருமை ஜெயலலிதாவை சாரும்
-பொதுமக்கள் யாரும் மதுக்கடைகளுக்கு செல்லக் கூடாது என கருணாநிதி வேண்டுகோள்
-திமுக ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்
-தமிழகத்தில் மதுவிலக்கை மனப்பூர்வமாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
-தேர்தல் அறிக்கையை கூட இதுவரை வெளியிட முடியாத நிலையில் உள்ளது அதிமுக.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.