தமிழகத்தில் நெருக்கடி நிலை நிலவுகிறது.. நக்கீரன் கோபால் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்
நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.

இவரது கைதுக்கு எதிராக தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
— M.K.Stalin (@mkstalin) October 9, 2018
உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்க!
அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நக்கீரன் கோபால் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
நக்கீரன் கோபால் மீதான வழக்கை நிபந்தனையின்றி திரும்ப பெறவேண்டும். நக்கீரன் கோபால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு அராஜகமாக செயல்படுகிறது, என்றுள்ளார்.
[நக்கீரன் கோபாலை சந்திக்க போலீஸ் அனுமதி மறுப்பு.. போராட்டத்தில் குதித்த வைகோ கைது]












Click it and Unblock the Notifications