சேலம் கலெக்டர் அதிமுக அலுவலக ஊழியர் போல செயல்படுகிறார்.. திமுக புகார்

ஆட்சித் தலைவர் மகரபூசணத்தை மாற்ற வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது. திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இன்று ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அதில் ஏற்காடு இடைத் தேர்தலி்ல அதிமுக அரசு தொடர்ந்து விதிமீறல்கள், நன்னடத்தை விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி மனு அளித்தனர்.
இதுகுறித்து டி.ஆர்.பாலு கூறுகையி்ல், சேலம் கலெக்டர் மகரபூசணம் அதிமுக அலுவல கடை நிலை ஊழியர் போல செயல்படுகிறார். அவரது தலையீட்டின்பேரில் ஏற்காடு தி.மு.க வேட்பாளர் மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு சாதகமாக கலெக்டர் நடந்து கொள்கிறார்.
மேலும், அக்டோபர் 23ம் தேதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மால் பேருந்துகளில், அதிமுக மிகவும் திட்டமிட்டு, அறிவியல்பூர்வமாக இரட்டை இலைச் சின்னத்தை வரைந்துள்ளது. தற்போது 50 பேருந்துகளில் இந்த சின்னத்தை வரைந்துள்ளனர். மேலும் 610 பேருந்துகளிலும் இதே சின்னத்தை வரைந்துள்ளனர்.
இந்த செயலானது அதிகாரதுஷ்பிரயோகமாகும். அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இதைச் செய்திருப்பது சட்டவிரோதமாகும். மேலும் இது குற்றச் செயலுமாகும்.
தொடர்ந்து அதிமுக ஏற்காடு தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் சேலம் கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்க முடியும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications