தமிழகத்தில் அதிமுக அரசையே திமுகவால் அசைக்க முடியவில்லை.. பாஜகவை என்ன செய்யமுடியும்? தமிழிசை நக்கல்
அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க கூட முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை: அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க கூட முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. குட்கா உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை கையிலெடுத்துள்ள திமுக அதனை காரணமாக வைத்து அரசை விமர்சித்து வருகிறது.
மேலும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் திமுக நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவை சாடி கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு முயற்சி
தமிழிசை மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பெட்ரோல் -டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ., அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றார்.
எதிர்மறையான அரசியல்
மேலும் அவர் பேசியதாவது, தமிழகத்தில் நேர்மறையான அரசியல் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் எதிர்மறையான அரசியலே நடக்கிறது.
திமுகவால் அசைக்க முடியவில்லை
தமிழகத்தில் அதிமுக ஆட்சியைகூட திமுகவால் அசைக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத திமுக, நாட்டையே ஆளும் பாஜகவை விமர்சிப்பபது நகைப்புக்குரியது.
நேர்மையாக தேர்தல்
மேலும் தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்றும தமிழிசை தெரிவித்தார்.
பாஜக விருப்பம்
இடைத்தேர்தல்களில் போட்டியிட பாஜக விரும்புவதாகவும் அவர் கூறினார். தமிழகத்ததில் திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது.
திமுக நாடகம்
இலங்கை இறுதிப்போரின்போது திமுக, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நாடகமாடி உள்ளது. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்