திமுகவுக்கு குட்பை.. கேரளாவுக்கு கனிமவளம் கடத்துவதாக கூறி சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ராஜினாமா
தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டமாக தென்காசி உள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஏராளமான கனிமவளங்கள் கடத்தி செல்லப்படுகிறது.

மண், மணல், ஜல்லிகள் என்று ஏராளமான கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதனை தடுக்க தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் கூட தொடர்ந்து தினமும் கனிமவளங்கள் லாரி லாரியாக கேரளாவுக்கு அள்ளி செல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் கனிமவள கொள்ளையால் நொந்துபோன திமுக நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனை செய்தவரின் பெயர் சந்திரசேகர். இவர் தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியை சேர்ந்தவர். திமுகவில் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் சந்திரசேகர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில், ‛‛கழகத்தின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சழல் துணை அமைப்பாளராக பணியாற்றினேன். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியத்தில் இருந்து ஏராளமான கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கனரக வாகனங்களால்பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் தீமைகளை பற்றி பலமுறை தங்களுக்கு எடுத்துரைத்தும் பலன் இல்லை. மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பளராக இருந்து கொண்டு எங்கள் பகுதி சுற்றுச்சூழலை காப்பாற்ற, பாதுகாக்க முடியவில்லை.
எனவே எனது பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரிடம் சுயமரியாதையை கற்ற மாணவர். ஆகவே எனது சுயமரிாதையகைாப்பாற்ற அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்து விலகுகிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications