அலறவிடும் ஆர்கே நகர்... ஒட்டுமொத்த திமுகவையே களமிறக்கும் ஸ்டாலின்!
ஆர்.கே. நகர் தொகுதியில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் ஒட்டுமொத்த திமுகவையும் அங்கு களமிறக்க திட்டமிட்டுள்ளாராம் ஸ்டாலின்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளை களமிறக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவால் ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் பிரதான அரசியல் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது.

அதிமுகவைப் பொறுத்தவரையில் சசி அணி, ஓபிஎஸ் அணி, தீபா கோஷ்டி மூன்றுமே மல்லுக்கட்டி வெல்லத்தான் முயற்சிக்கும். இப்படி அதிமுக வாக்குகள் பிரிந்து கிடக்கும் நிலையில் திமுக எளிதாக வென்றாக வேண்டிய நிலை இருக்கிறது.
1989 மற்றும் 1996 தேர்தல்களில் திமுக இத்தொகுதியில் வென்றதும் இப்படித்தான். இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியின் பொதுவேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனால் திமுக முழுவீச்சில் தேர்தல் பணியாற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால் திமுகவின் மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏக்கள் என அனைவரையும் அதாவது ஒட்டுமொத்த திமுகவையே களமிறக்கும் முடிவில் இருக்கிறாராம் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications