உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: எங்களைக் கேட்காம தீர்ப்பு சொல்லக்கூடாது- திமுக கேவியட் மனு
சென்னை: உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என திமுக தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 3 அரசாணைகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேபோல் தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பட்டிருந்தார்.

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக திமுக தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த கேவியட் மனுவை திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டபிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வழக்கில் மனு தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக முன்னறிவிப்போ, தகவலோ இன்றி பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு அளிப்பதைத் தடுக்கும்வகையில் வாதி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவின் பெயர்தான் கேவியட் மனு.
அவசரகதியில் முறையாக இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றாமல் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல்செய்த மனுமீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications