For Daily Alerts
Just In
வண்டலூர் அருகே திமுக பிரமுகர் மர்மநபர்கள் வெட்டிக்கொலை
வண்டலூர் அருகே தி.மு.க. பிரமுகர் விஜயராஜ் என்வர் தனது அலுவலகத்தின் வெளியே வைத்து மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் விஜய் என்கிற விஜயராஜ் நேற்று இரவு மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் விஜய் என்ற விஜயராஜின் அலுவலகம் வண்டலூர் விரிவாக்கப் பகுதியில் உள்ளது. விஜயராஜ் நேற்றிரவு அலுவலத்திற்கு வந்திருந்தார். பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் விஜயராஜ் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
அதிலிருந்து தப்ப முயன்ற விஜயராஜை அந்த கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிகொலை செய்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கொலைசெய்யப்பட்ட விஜயராஜ், வண்டலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தார்.
Comments
English summary
unidentified gang hacked Kanchipuram District DMK functionary vijayaraj at vandaloor
Story first published: Tuesday, December 20, 2016, 3:31 [IST]