நடுத்தெருவில் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் மோதல்: அரிவாளால் வெட்ட பாய்ச்சல்
சேலம்: சேலத்தில் நடுத்தெருவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அரிவாளுடன் மோதிக் கொண்டனர்.
சேலத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். கூட்டத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு அவர்கள் வெளியே வந்தனர். அப்போது ஸ்டாலின் ஆதரவாளர்களான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கொண்டாலம்பட்டி மோகன் ஆகியோரின் ஆட்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களான வீரபாண்டிய ஆறுமுகத்தின் மகன் ஆர். ராஜா, பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரின் ஆட்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது ராஜேந்திரனின் ஆதரவாளர் ஒருவர் ஆர். ராஜாவின் ஆதரவாளரை அரிவாளால் வெட்டப் பாய்ந்தார். அப்போது அவரை மற்றவர்கள் தடுத்தனர். இதையடுத்து இரு தருப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பினர்.
நடுத்தெருவில் திமுகவினரின் கோஷ்டி மோதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications