கருணாநிதி, ஸ்டாலின் கையில் திமுக இல்லை... கார்ப்பரேட் கம்பெனி வசமிருக்கு: வைகோ
நெல்லை: பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக என்ற இயக்கம் கருணாநிதியிடமோ, ஸ்டாலினிடமோ இல்லை. அக்கட்சி இப்போது கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்கியுள்ளது என்று திமுகவில் 20 ஆண்டுகாலம் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனி அணியாக களமிறங்குகிறது. இதுவரை 4 கட்ட பிரச்சாரங்களை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முடித்துள்ளனர்.

இனி வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை என பல கட்ட நகர்வுகள் உள்ள நிலையில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரான வைகோ, தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து தேர்தலுக்காக களப்பணியாற்ற ஆலோசனைகளை கூறி வருகிறார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, உடுமலைப் பேட்டையில் தலித் இளைஞர் சங்கர்கொலையை தமிழக போலீஸ் தடுத்து நிறுத்த தவறிவிட்டது. இதனை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கடந்த இரண்டரை மாத காலமாக தேமுதிமுகவிற்காக திமுக காத்துக்கொண்டிருந்தது. ஆனால் திமுக வுடனான கூட்டணிக்கு ஏற்கனவே விஜயகாந்த் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா,திமுகவை வை தில்லுமுல்லு கட்சி என்றாரே, அதற்கு கருணாநிதி எந்த பதிலும் சொல்லவில்லையே.
எந்த கேள்விக்கும் உடனடியாக பதில் சொல்லுவாரே கருணாநிதி. ஆனால் பிரேமலதா சொன்னதற்கு பதில் எங்கே போனது. மவுனமாக இருந்தால் அது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியா என்று கேட்டார் வைகோ.
அண்ணாதுரையால் உருவாக்கப்பட்ட திமுக என்ற இயக்கம் கருணாநிதியிடம் இல்லை. ஏன் ஸ்டாலினிடம் கூட இப்போது திமுக இல்லை. அக்கட்சி கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்கியுள்ளது. திமுகவை இருபது ஆண்டுகள் வளர்த்தவன் என்ற முறையில் இதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications