காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை: வைகோ
சென்னை: காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அறிவித்தார்.

தமிழ் மக்களின் நலனுக்காக கட்சி வேறுபாட்டை, கசப்புணர்வை மறந்து ஒன்றிணைந்து போராட தயாராக இருப்பதாக கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரும்போது மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் அதனைச் செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார். தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்த மத்திய காங்கிரஸ் அரசோடு, திமுக கூட்டுக் குற்றவாளியாக இருந்தது என வைகோ சாடினார்.
அதனால், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது ஒரு ஏமாற்று வேலை. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. எனவே இந்த கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்குபெறாது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications