ராம்குமாரின் தந்தையை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு... ஏன்?
சென்னை: ராம்குமாரின் தந்தை பரமசிவம், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ராம்குமாரின் மரணம் குறித்து பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்க கருணாநிதி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தனது மகனின் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாக திமுக தலை கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், கிருஷ்ணசாமி, சீமான் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுமே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராம்குமாரின் தந்தை பரமசிவமும், வழக்கறிஞர் சங்கர சுப்பும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிட்டால் நீதி கிடைக்கும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், இந்த விஷயத்தில் நேரடியாக திமுக தலைவர் கருணாநிதி தலையிடும் போது ராம்குமாரின் மரணம் அரசியல் ஆக்கப்பட்டு உண்மை வெளிவராமல் போய்விடும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் பரமசிவமும், வழக்கறிஞர் சங்கர சுப்பும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முடியாமல் போய்விட்டது. சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது அவரது குடும்பத்தினருக்கு திமுக பொருளாளர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications