தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று காலை முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் போலீசார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று தமிழகம், புதுவையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. இன்று காலை முதல் தமிழகம், புதுவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பேருந்து போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications